சந்திரமுகி 2 ரஜினியுடன் நடிக்கும் லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கும் ‘அணணாத்தே’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரானா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேய் படங்களை எடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா வரிசை படத்தின் மூலம் 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினர். சொந்தமாக படங்களை ரிலீஸ் செய்து வருவதால் அவர் தற்போது தமிழ் சினிமாவின் மா பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருக்கிறார்.

ரஜினி நடிக்கும் சந்திரமுகி-2 திரைப்படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையில் நிதியுதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா உதவியாக சுமார் 3 கோடி அளவிற்கு உதவ இருப்பதை தகவலாக பகிர்ந்துள்ளார். அத்துடன் ரஜினியுடன் இணைந்து பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கா இருப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.

View image on Twitter


Comments are closed.

https://newstamil.in/