சென்னையில் இன்று 1842 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 215 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 134 பேருக்கும், மதுரையில் 352 பேருக்கும், ராமநாதபுரத்தில் 149 பேருக்கும், ராணிப்பேட்டையில் 104 பேருக்கும், திருவள்ளூரில் 251 பேருக்கும், திருவண்ணாமலையில் 173 பேருக்கும், விருதுநகரில் 100 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/