Thursday, September 10, 2026
LatestNEWS

காங்கிரஸிலிருந்து விலகினார் சிந்தியா

ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார். இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கமல்நாத் மற்றும் டில்லி மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சிலும் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா அலுவலக ஊழியர் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அவர் ராஜினாமா செய்த கடிதத்தை நகலை ஒப்படைத்த பின்னர் ஜோதிராதித்யா சிந்தியாவின் அலுவலக ஊழியர்கள் வெளியேறினர்.

Image

Comments are closed.