கணவரை ஆபாச வீடியோ பார்த்து அதை போல் நடத்துமாறு வற்புறுத்திய மனைவி!! பகீர் சம்பவம்

ஆபாச வீடியோகள் பார்ப்பதால் ஒரு கட்டத்தில் உங்களை நீங்களே தாழ்வாகக் கருதும் எண்ணம் வளர்ந்துவிடும். ஆபாச வீடியோகளைப் பார்ப்பதில் இந்தியர்கள் உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இன்ஜினியருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த பெண் மருத்துவருக்கும் இணையதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது பெண் டாக்டர் திருமணத்துக்கு முன்பு தனக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், பின்பு அவரை பிரிந்து விட்டதாகவும் கணவரிடம் கூறினார். மேலும் அந்த முன்னாள் காதலர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கொண்ட கணவர் அதனை பெரிதாக்க விரும்பாமல் விட்டுவிட்டு இருக்கிறார்.

குடும்ப வாழ்க்கை சந்தோ‌ஷமாக சென்ற நிலையில் அந்த பெண் டாக்டர் தனது கணவரை ஆபாச வீடியோக்கள் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதோடு, அந்த காட்சிகளை போன்று நடந்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார்.

மனைவியின் வார்த்தைக்கு இணங்க அவரும் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படியாக ஒரு நாள் பெண் மருத்துவரின் செல்போனில் ஆபாச வீடியோ இருப்பதை அவரது கணவர் பார்த்து இருக்கிறார், அதில் தனது மனைவியுடன் வேறு ஒரு வாலிபர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதற்கு அவர் அந்த வீடியோவில் இருப்பது தான் என்றும் தன்னுடன் அந்த வீடியோவில் இருப்பவர் தன்னுடைய முன்னாள் காதலர் என்றும் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த பழைய வீடியோவை காட்டி முன்னாள் காதலன் மிரட்டி வருவதாகவும் கூறிய பெண் டாக்டர் தன்னை அப்பாவி போல காட்டிக் கொண்டார்.

தேவைப்பட்டால் நீதி மன்றத்தில் காட்டுவதற்காக தான் வைத்துள்ளதாக அவர் தன் கணவரிடம் கூறி இருந்தார். ஆகையால் இந்த சம்பவத்தை அந்த இன்ஜினியர் அப்படியே விட்டுவிட்டார்.

இந்நிலையில் ஜனவரி 3-வது வாரத்தில் கணவர் ஆன்லைனில் தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளுமாறு ஒரு வீடியோவை அவர் பார்த்திருக்கிறார் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார்.

இதுபற்றி அவர் மனைவியிடம் கேட்ட போது நான் திருமணத்திற்கு முன்பு பலருடன் உறவு கொண்டிருக்கிறேன் . இதில் என்ன இருக்கிறது தற்போது உங்களுடன் மட்டும்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த வீடியோக்கள் எப்படி ஆன்லைனில் வெளியானது என்பது எனக்கு தெரியாது என கூறினார்.

மனைவியின் செயல்களால் வேதனை அடைந்த கணவர் அவரை பிரிய முடிவு செய்து விவாகரத்து கேட்டு மனு செய்தார். தற்போது இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பேரில் ஆலோசனை மைய நிர்வாகிகள் இருவரையும் நேரில் அழைத்து பேசி ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கணவர் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் . ஆனால் அந்த பெண் மருத்துவரும் தன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.



Comments are closed.

https://newstamil.in/