எவை எவைக்கு அனுமதி? – தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றின் 2-வது நாடு முழுவதையும் உலுக்கி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

  • தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்
  • அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும்
  • மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி
  • நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்
  • காய்கறி- பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்
  • நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்
  • அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்
  • அத்தியாவசியத் துறைகளைத் தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது
  • மத்திய அரசு அலுவலகங்களுக்கும் கட்டுப்பாடு பொருந்தும்
  • அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
  • வங்கிகள், ஏடிஎம். மையங்கள், காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
  • காய்கறி, மீன், இறைச்சி கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி
  • மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி விநியோகிக்க நண்பல் 12 மணி வரை மட்டுமே அனுமதி
  • திருமணம், நேர்முகத்தேர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
  • மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்
  • உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி
  • பால், கொரியர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி
  • 50 பேருக்கு மிகாமல் திருமண நிகழ்வுகளும், 20 பேருக்கு மிகாமல் இறுதி ஊர்வலமும் நடத்த அனுமதி
  • கிடங்குகளில் சரக்குகளை ஏற்றி, இறக்க, சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி
  • பெட்ரோல், டீசல் பங்குகள் நேரக்கட்டுப்பாடு இன்றி செயல்பட அனுமதி
  • இன்றும் நாளையும் கடைகள் இயங்கும்
  • இன்றும், நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்
  • தொலைத் தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி


Comments are closed.

https://newstamil.in/