ஓட்டுநரின் மீது தீ; டீசல் நிரப்பும் போது விபரீதம்! – அதிர்ச்சி வீடியோ

பூந்தமல்லி அருகே கன்டெய்னரில் டீசல் நிரப்பும்போது ஏற்பட்ட தீ விபத்தில் , ஓட்டுநர் உடலில் தீ பிடித்த படி ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பரம்பாக்கம் வழியாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர், அங்குள்ள பெட்ரோல் நிலையத்திற்கு டீசல் நிறப்புவதற்காகச் சென்றார்.

டீசல் சரியாக நிறப்பப்படுவதை உறுதி செய்வதற்காக கண்டெய்னர் ஓட்டுநரே பங்க் ஊழியரிடம் இருந்து டீசல் கன்னை வாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென டீசல் டேங்கில் இருந்து தீ வெளியேறியதை அடுத்து, கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றியது. உடலில் தீ பற்றிய படியே அவர் அங்கிருந்து ஓடினார்.

தற்போது 30 சதவீதம் உடலில் தீக்காயங்களுடன் ஓட்டுநர் சிகிச்சை பெற்று வருகிறார். தீக்காயம் அடைந்தவர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சிங் என்ற தகவல்கள் வெளியாகிறது.



Comments are closed.

https://newstamil.in/