பிரியா பவானி மீது காதல் – கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா

தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது இயக்கத்தில் வந்த வாலி, குஷி படங்கள் பெரிய வெற்றி பெற்றன. நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இயக்கினார். தற்போது பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் இணைந்து மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்த ஜோடி இணைந்து ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்திலும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அவரது காதலை ஏற்க பிரியா பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. வயது வித்தியாசத்தை காரணமாக சொல்லி காதலை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

அதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவில், ‘பிரியா பவானி சங்கரிடம் நான் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று சில முட்டாள் தவறான செய்திகளைப் பரப்பிவருகிறார்கள். மான்ஸ்டர் திரைப்படத்திலிருந்து அவர், எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட. தயவு செய்து வெறுப்பேற்றாதீர்கள். அடிப்படையற்ற தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள். நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/