திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிக்கு தீ வைப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாம்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தின் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது

கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஓட்டுச்சாவடிக்குள் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ஓட்டுப்பெட்டியை வெளியே எடுத்து வந்து தீவைத்துவிட்டு ஓடினர்.

இதனையடுத்து ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் குவவிந்துள்ளனர். சம்பவ இடத்தில், எஸ்பி அரவிந்தன் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.



Comments are closed.

https://newstamil.in/