வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் தான் இருக்கிறார்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாட்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள படங்களை வட கொரிய செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெள்ளிக்கிழமை ஒரு தொழிற்சாலைக்கு விஜயம் செய்ததாகக் கூறப்படுகிறது, அவர் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த மாதம் 11ம் தேதியன்று ஆளும் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அதுவே அவர் பங்கேற்ற கடைசி பொதுநிகழ்ச்சி ஆகும்.

அதன் பின்னர் அந்நாட்டின் மிக முக்கிய நிகழ்வான வட கொரியாவை நிறுவியவரும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம்-2 சங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கிம் பங்கேற்காதது பல்வேறு யூகங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

இந்நிலையில் தான் தற்போது தென்கொரியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான யோன்ஹாப், வடகொரிய அதிபர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 20 நாட்களாக வெளியான பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/