தனியார் மருத்துவமனைகள் அரசின் கீழ் செயல்படும் – ஜெகன்மோகன் அதிரடி

மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததால் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்த ஆந்திர அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.

கொரோனா தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வருவதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுவரை ஆந்திர மாநிலத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு எடுத்துள்ள முடிவின்படி தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களை உரையாற்றிய சுகாதார அமைச்சர் அல்லா காளி கிருஷ்ணா சீனிவாஸ், துணை மருத்துவர்கள் உட்பட மருத்துவ சமூகத்திற்கு நோயாளிகளின் நேரடி நிர்வாகத்தில் தேவையான பயிற்சி அளிக்கப்படும் என்றும் நிலையான நெறிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படும் என்றும் கூறினார். நோயின் தன்மையைக் கருத்தில் கொண்டு, தீவிர கவனிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறை பின்பற்றப்படும், என்றார்.


73 thoughts on “தனியார் மருத்துவமனைகள் அரசின் கீழ் செயல்படும் – ஜெகன்மோகன் அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/