இந்திய அணி தொடரை 5-0 என வென்றது; பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 5-0 என முழுமையாக வென்றது.

ஐந்தாவது டி-20 போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அடுத்தடுத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தநிலையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சைனி, சர்துல் தாகுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



Comments are closed.

https://newstamil.in/