கொரோனா – தமிழகத்தில் 411 பேர் பாதிப்பு; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். சேலத்தில் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 58 வயதான நபர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சிசை ஏற்படுத்தியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/