கொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 2.40 இலட்சத்தை கடந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் இருக்கிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கொல்கத்தாவுக்கு சென்னையில் இருந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும், டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் போன்ற நகரங்களில் இருந்து விமானம் கொல்கத்தாவுக்கு வரவும் தடை விதித்துள்ளதாக கொல்கத்தா அறிவித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/