அதிமுக ஷாக்: ‘ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிருப்பேன்’ – சசிகலா பேசும் ஆடியோ

ஓ.பன்னீர்செல்வம் அவராகவே ராஜினாமா செய்துவிட்டார், இல்லையெனில் அவரை தான் முதல்வராக்கிவிட்டு போயிருப்பேன் என சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன்.

1987-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம்.

கட்சியில் இருப்பவர்களை நீக்கிக்கொண்டே சென்றால் எதிர்க்கட்சியாக எப்படி எடுத்து செல்லவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஓபிஎஸ் அவராகவே விலகிவிட்டார். இல்லையெனில் அவரை தான் முதல்வராக்கிவிட்டு போயிருப்பேன்.

இப்போது கட்சியில் ஜாதி ரீதியாக போய்கொண்டிருக்கிறார்கள் என பலரும் கூறி வருந்துகின்றனர். அதிமுக ஒரு பொதுவான கட்சி. இதனை இந்தளவுக்கு கொண்டுசென்றது வருத்தமளிக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்.

எனவே, இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம்.

நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/