சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 68 வயதான தாத்தா

சென்னையில் 68 வயதான தாத்தா 13 வயது சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்தி நாசம் செய்ய முயன்றிருக்கிறார்.

சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போனில் வைத்திருப்பவர்கள், பதிவேற்றும் நபர்கள் என தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி 68 வயதாகிறது இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

8ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை தனது வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில் வைத்திருந்த வீடியோக்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவலை சொல்லி, 1098 ஹெல்ப் லைன்னை தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்க அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமியை மீட்டு அவரிடம் விசாரித்த போது, கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து இது போன்று துன்புறுத்தி வந்ததும், இது பற்றி வெளியில் கூற கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பிரமுகர் என்பதால் போலீசார் விடுவித்து விடுவார்கள் என்று எண்ணி அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கல்லறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாளையம் ரவியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *