பின்னால் தொட வந்தவன்; விரலை ஒடித்த டாப்ஸி!

“நான் அந்த வகையான கூட்டத்திற்குள் செல்லும்போது இதுபோன்ற ஏதாவது நடக்கும் என்று எனக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது,” என்று டாப்ஸி பன்னு கூறினார்

டாப்ஸிக்கு சினிமாவுக்கு வரும் முன்பு சந்தித்த ஒரு மோசமான சம்பவம் பற்றி டாப்ஸி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அது மக்கள் எப்போதுமே ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளும் விதத்தில் கூட்டமாக இருக்கும் இடம்.

அந்த கூட்டத்தில் நான் போனபோது ஒருவன் என் பின்புறத்தைத் தொட முயன்றான். இந்த சம்பவத்திற்கு முன்பும் எனக்கு இதுபோல மோசமான அனுபவங்கள் இருந்தன.

ஆனால் இந்த நேரத்தில், நான் அந்த கூட்டத்திற்குள் செல்லும்போது இதுபோன்ற ஏதாவது நடக்கும் என்று எனக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது.

அவன் அந்த கூட்டத்தில் என் பின்னால் தொட முயன்றதும் “நான் தைரியமாக அவனது விரல்களை முறுக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன்” என டாப்ஸி கூறியுள்ளார்.

நடிகையின் இந்த தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/