பரவை முனியம்மா காலமானார்

தூள் படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தார், நாட்டுப்புற பாடலில் புகழ் பெற்றவரும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சில மாதங்களாக உடல்நலக்குறைவால் இருந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.

இதை தொடர்ந்து தோரனை, சண்ட, வீரம் என பல படங்களில் இவர் நடித்துள்ளார். அதோடு பரவை முனியம்மா நடிகை தாண்டி கிராமிய பாடகியும் கூட, இவர் பல நூறு பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக தூள் படத்தில் இவர் பாடிய சிங்கம் போல பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/