இளம் நடிகை திவ்யா சௌக்ஸி காலமானார்!

பாலிவுட்டின் பிரபல டி.வி. சீரியல் நடிகையான திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார் இவருக்கு வயது 29.. இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வருடம் திரையுலகிற்கு மிகவும் கஷ்ட காலம் தான். ஆம் பல நஷ்டங்கள், பல உயிரிழப்புகள் இந்த வருடம் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில் பாடகியாகவும், நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் திவ்யா சௌக்ஸி.

லண்டனில் நடிப்பு கலையைப் பயின்றவரான திவ்யா, இவர் ஹிந்தியில் வெளிவந்த Hai apna dil toh awara என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே நேற்று இவர் கேன்சர் நோயால் காலமாகியிருப்பது தற்போது தெரிந்துள்ளது.

மேலும் இவர் இறப்பதற்கு முன்பு தனது ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் தெரிவித்துள்ளது : ‘ நான் சொல்ல நினைப்பதற்கு வார்த்தைகள் மட்டும் போதாது. பல மாதங்களாக எனக்கு தொடர்ந்து ஆறுதல் Messages வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது நான் இதை சொல்ல வேண்டிய தருணம். நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன். நான் வலிமையாகதான் இருக்கிறேன். இந்த கஷ்டங்கள் இல்லாமல் இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும். Bye ‘ என எமோஷனலாக பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை திவ்யா.

மேலும் இவரின் இந்த திடீர் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/