நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.

2009-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ரேனிகுண்டா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். இதில் ஜானி, சனுஷா, நிஷாந்த் இயக்கியிருந்தார். நடித்திருந்தனர். தீப்பெட்டி கணேசன் என்பவர் இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்திருந்தார்.

இது தான் தீப்பெட்டி கணேசன் அறிமுகமான முதல் படமாம். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘தென்மேற்குப் ‘மக்கள் ‘தல’ அஜித்தின் ‘பில்லா 2’, விஷ்ணு விஷாலின் ‘நீர்ப் பறவை’, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் தீப்பெட்டி கணேசன். கடைசியாக இவரது நடிப்பில் வெளி வந்த படம் ‘கண்ணே கலைமானே’. பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்த இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் தீப்பெட்டி கணேசன் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று காலமானார். சீனு ராமசாமி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


28 thoughts on “நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *