Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று

நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எழுதினார்.

இந்திய அளவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதர மாநிலங்களில் கரோனா பரவல் குறையவில்லை. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தற்போது அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் – “சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டுத் தனிமையில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்” என்று தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான கன்னடப் படமான ‘பிரேமபாரஹா’ படத்துடன் ஐஸ்வர்யா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளித்திரையில் நுழைந்தார். இதை அர்ஜுன் சர்ஜா இயக்கியுள்ளார். சந்தன் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, நடிகர் துருவா சர்ஜா மற்றும் பிரேர்ணா சங்கர் ஆகியோருக்கும் கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. துருவாவே இதை ட்விட்டரில் தெரிவித்தார். இருவரும் இப்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Comments are closed.