விஜய்க்கு சிபிஐ சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு – தமிழக அரசியலில் பரபரப்பு
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில், விஜயிடம் நேரில் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சியை தொடங்கி, தொடர்ந்து மக்கள் சந்திப்பு, பிரச்சார கூட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சிபிஐ நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் இது அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்ட, எதிர்க்கட்சிகள் சட்டப்படி விசாரணை நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், வரும் நாட்களில் இது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
