தமிழகத்தில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 5,000-ஐ நெருங்கியது

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,937 பேர் ஆண்கள், 2,042 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 907 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 66,763 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 2,481 ஆக அதிகரித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/