வீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை

கொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர். சிலர் மாத சம்பளம் வருமா வராதா என்ற ஏக்கத்தில் இருப்பர்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/