Thursday, September 10, 2026
LatestNEWS

Oxygen tank leaks 22 dead – மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி

நாசிக்: மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், ஆக்சிஜன் கசிவு காரணமாக, விநியோகம் தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments are closed.