எப்படி அலுவலகம் செல்வது?? ஐ.டி. பணியாளர்கள் கடும் எதிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டித்தார். இருப்பினும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஏப்ரல் 20 முதல் தொழில்நுட்ப வணிகங்களுக்கு சில சலுகைகள் இருக்கலாம், அவை அதிக எண்ணிக்கையிலான COVID-19 வழக்குகளைக் கொண்ட ‘ஹாட்ஸ்பாட்’ பகுதியில் இல்லை என்றால்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முக்கிய தளர்வுகளில் ஒன்று, ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து 50% திறனில் பணியாற்ற அனுமதிக்கும். ஒரு அறிக்கையில், நாட்டின் வளர்ச்சியில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அரசாங்கம் கூறியது.

ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பணியாளர்கள் அனைவருக்கும், வாகன வசதி செய்து கொடுக்கவில்லை. பணியாளர்களில், 80 சதவீதம் பேர், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் தான் வந்து செல்கின்றனர்.

ஆனால், வாகனங்கள் இயங்காத நிலையில், பணிக்கு செல்வது சிரமமாக இருக்கும். மேலும், அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன. இது, கொரோனா நோய் பரவலுக்கு, வாய்ப்பாக அமையும்.

தற்போது, ஊரடங்கு காரணமாக, பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரிகின்றனர். எனவே, 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை, அரசு திரும்ப பெற வேண்டும். தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும், மாத ஊதியம் வழங்குவதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும்; ஆட்குறைப்பை கைவிட, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/