5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு உத்தரவு

5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அதனை பரிசீலித்து அரசாணையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய முறையிலேயே தேர்வு நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/