DMDK withdraws from AIADMK alliance – அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்ததுடன் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது.

Image

இந்த நிலையில், ஆனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், ஆரம்பம் முதலே தே.மு.தி.க. அதிருப்தியில் இருந்து வந்தது. அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி, 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பா.ம.க.,விற்கு 23 தொகுதிகள், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், தேமுதிக.,விற்கு 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.

விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து (மார்ச் 09) அதிமுக, பா.ஜ., கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துணைச் செயலாளர் பார்த்த சாரதி கூறுகையில், ‘தனித்துப் போட்டியிடுவது குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,’ என்றார்.

எல்.கே.சுதீஷ் கூறுகையில், ‘அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். இன்று தான் எங்கள் அனைவருக்கும் தீபாவளி. அதிமுக.,வில் உள்ள கே.பி.முனுசாமி, பா.ம.க.,வின் ஸ்லீப்பர் செல்லாக, அவர்களது கட்சிக்கு ஆதரவாக உள்ளார்,’ என்றார்.

இது குறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/