வீடியோ: யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை – 3 பேர் கொண்ட விசாரணை குழு

தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான் ஒவ்வொரு ஊர் மற்றும் நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் உணவு வகைகளை ருசி பார்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவரது யூடியூப் பக்கத்தில் 40 லட்சம் பேர் வரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த சுகாதாரத்துறை குழு அமைத்தது. தனது குழந்தையின் பாலினம் குறித்து இர்பான் வீடியோ வெளியிட்ட நிலையில் இவ்வாறு தடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசுவின் பாலினத்தை கண்டறியும் சோதனையை வெளிநாட்டில் செய்ததாக இர்பான் வீடியோ வெளியிட்டார்.



Comments are closed.

https://newstamil.in/