இந்தியா மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி!

ரோகித் சர்மா, ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆடாத நிலையிலும் நியூசிலாந்து அணிக்கு ஆட்டம் காட்டிய இந்தியா!

166 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்ட்டின் குப்தில் 4 ரன்களுக்கு வெளியேறிய நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான காலின் முன்ரோ 64 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 6 ரன்களே எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதன் காரணமாக போட்டியில் வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் நகர்ந்தது.

சூப்பர் ஓவரில் நியூசிலாந்து:

சூப்பர் ஓவரை பும்ரா வீசினார். அவரின் ஓவரில் எடுக்கப்பட்ட ரன்கள்.

முதல் பந்தில் – 2 ரன்கள்
2வது பந்து – 4 ரன்கள்
3வது பந்து – 2 ரன்கள்
4வது பந்து – விக்கெட்
5வது பந்து – 4 ரன்கள்
6வது பந்து – 1 ரன்

சூப்பர் ஓவரில் இந்தியா:

கே.எல்.ராகுல் மற்றும் கோலி ஆகியோர் களமிறங்கினர். நியூசி கேப்டன் சவுத்தி சூப்பர் ஓவரை வீசினார். அவரின் ஓவரில் எடுக்கப்பட்ட ரன்கள்.

முதல் பந்தில் – 6 ரன்கள்
2வது பந்து – 4 ரன்கள்
3வது பந்து – விக்கெட்
4வது பந்து – 2 ரன்கள்
5வது பந்து – 4 ரன்கள்



Comments are closed.

https://newstamil.in/