விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி! – வீடியோ

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து. விபத்தில் சிக்கி மூச்சுத் திணறல் காரணமாக நோயாளிகள் 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்.

சொர்ணா பேலஸ் எனும் அந்த விடுதியில் அதிகாலையில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தால், உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அலறியடித்து வெளியேறியுள்ளனர்.

இதில் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக 7 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



Comments are closed.

https://newstamil.in/