இந்தியர்கள் 2 பேருக்கு கொரானோ வைரஸ்!

ஜப்பான் அருகே, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில், ‘கொரோனா’ பாதித்தோர் எண்ணிக்கை, 174ஐ கடந்தது. இந்தியர்களை மீட்க, ஜப்பானில் உள்ள, நம் நாட்டு துாதரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில், முதல் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அந்நாட்டில் 908 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், 2002 ஆம் ஆண்டு சீனாவைத் தாக்கிய சார்ஸ் வைரஸை விட, கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சீன சுகாதாரத்துறை அறிவித்தள்ளது.

இதனிடையயே ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள 3,700 பேரில் இதுவரை இந்தியர்கள் 2 பேர் உட்பட மொத்த் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது



Comments are closed.

https://newstamil.in/