விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன், அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரமும் இன்று ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறை உத்தரவு.

‘பிகில்’ படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பணம் ஏதும் கைப்பற்றபடவில்லை எனவும் இரு வேறு விதமாக தகவல் வெளியானது. சோதனைக்கு பிறகு கடந்த 2 நாட்களாக விஜய் வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு சென்றார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (பிப்.,10) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/