Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

செல்பி எடுக்க வந்த ரசிகரை திட்டிய சமந்தா!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் சமந்தா, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்ததால் மிகவும் கோபப்பட்டிருக்கிறார்.

அனுமதியின்றி படங்களை எடுக்க முயன்ற ரசிகரிடம் நடிகை சமந்தா வாக்குவாதம் செய்தார். சமந்தா நண்பர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

கோயிலின் படிக்கட்டுகளில் ஏறும் போது, ​​ஒருவர் பின்னால் ஓடி வந்து புகைப்படம் எடுக்க முயன்றார். சமந்தா அவரை எச்சரித்தார்: ” இது கோவில் கண்ணியமாக இருங்கள், புகைப்படம் எடுக்க வேண்டாம” என்றார்


Comments are closed.