கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அட்மிட் ஆனவர் மரணம்!

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இறந்தார்.

அவருக்கு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/