பிரபல டிக் – டாக் நட்சத்திரம் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல டிக் – டாக் நட்சத்திரம் , சியா கக்கர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது (16). இளம் பெண்ணான இவர் புதன்கிழமை இரவு டெல்லி கீதா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சியா கக்கார். இவரின் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கக் கூடியது. டிக்டாக்கில் சுமார் 11 லடசத்துக்கும் அதிகமான பேர் அவரை பின் தொடர்ந்தனர். டிக் டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா இயங்கி வந்தார்.

இந்த நிலையில், அவர் திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

“இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையினால் இருக்கலாம். வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார். சியா ஒரு பிரகாசமான திறமைசாலி” என்று அவரது மேலாளர் கூறியுள்ளார்.

ஊரடங்கால் , சியா கக்கர் சில மாதங்கள் வீட்டில் இருந்ததாகவும் , கடந்த 4-5 நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சியா கக்கரின் திடீர் மறைவுக்கு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிவிட்டரில் தங்களது இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜூன் 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.

https://newstamil.in/