Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

இந்த பூமி எவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது – கார்த்திக் சுப்புராஜ் அதிரடி

நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறை வெடித்து உள்ளதால் பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் மிக ஆவேசமாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்…

இந்நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “குடியுரிமை சட்ட திருத்தம் தவறானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்தியாவை மதசார்பற்றதாக வைத்திருப்போம். CAA வேண்டாம் என சொல்லுவோம். NRC வேண்டாம். அதேபோல் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதலும் வேண்டாம்.

இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என அதிரடியாக கூறியுள்ளார்”.

இவர் தனது படமான பேட்டயில் ரஜினி பேசுவது போல ஒரு டயலாக் வைத்திருந்தார் அது என்னவென்றால் இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது பூமி யாருக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என ஒரு டயலாக் வந்திருந்தது.


Comments are closed.