மேலும் 2 வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: நாடு முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பரவலைக் கட்டுப்டுத்த நாடு முழுவதும் 40 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு உத்தரவு காலம் நிறைபெறவுள்ளநிலையில், மேலும் இரண்டு வார காலத்துக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து மத்திய அரசு வரையறுத்துள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/