Thursday, September 10, 2026
LatestNEWS

உலகமே ஊரடங்கு இல் இருக்கும் போது; நாங்கள் மட்டும் உழைக்கிறோம் – அனிதா சம்பத் வருத்தம்!

அனிதா சம்பத் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார், மேலும் சர்கார் படத்தில் செய்தி வாசிப்பாளராக முகம் காட்டி பிரபலமானார்.

தற்போது லாக்டவுன் காலத்திலும் யூடுயூபில் புதுவிதமாக வீடியோக்கள் செய்து வெளியிட்டு வரும் அவர் தற்போது “உலகமே ஊரடங்கு இல் இருக்கும் போது, செய்தி வாசிப்பாளராக உயிரை பொருட் படுத்தாமல் நாங்கள் தினமும் வேலைக்கு செல்கிறோம்.

எங்களை போற்றவில்லை என்றாலும், தூற்ற வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் திசை திரும்பியுள்ளார்.


Comments are closed.