துப்பாக்கிச்சூடு வழக்கு – நடிகர் சல்மான் கானின் ‛பகீர்’ வாக்குமூலம்

லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது கும்பல் உறுப்பினர்களிடமிருந்து தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் மிரட்டல்கள் குறித்து மும்பை குற்றப்பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்புப் பிரிவுக்கு நடிகர் சல்மான் கான் அளித்த அறிக்கையை இந்தியா டுடே அணுகியுள்ளது.

தன்னை கொலை செய்ய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் திட்டம் தீட்டியதாக மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் நான்கு முறை சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் மும்பை போலீசார் 1,735 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் அளித்த வாக்குமூலத்தில், தன்னை மற்றும் தனது குடும்பத்தை லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



https://newstamil.in/