விளையாட்டு விபரீதம்! சுவர்களுக்கு இடையில் சிக்கிய சிறுவன்!

சென்னை பொன்னேரி அருகே இரண்டு சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நிதிஷ்(12). அந்த பகுதியில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். நிதிஷ் வீட்டின் முன்பகுதியில் சுற்றுச்சுவருக்கும் தூணிற்கும் இடையில் சிறிய இடைவெளி இருக்கிறது. விளையாடிக்கொண்டிருந்த நிதிஷ் அதில் புகுந்து வெளிவர முயன்றிருக்கிறான்.

அப்போது எதிர்பாராத விதமாக தூணிற்கும் சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு பரிதவித்தான் வெளியே வர முடியாமல் அலறி கொண்டிருந்த சிறுவனை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். சுற்றுச்சுவரின் ஒரு பக்கத்தை உடைத்து சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

சோர்வாக இருந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சிறுவன் நலம் பெற்றான். வீட்டில் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும் என அவனுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.


81 thoughts on “விளையாட்டு விபரீதம்! சுவர்களுக்கு இடையில் சிக்கிய சிறுவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/