நடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்

பிரபல நகைச்சுவை நடிகர் கிங் காங், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 1990 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ஆதிசயா பிராவி படத்தில் நடித்து பிரபலமானார். கிங் காங் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் பல படங்களிலும் நடித்துள்ளார், வடிவேலுவுடன் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றி பெற்றன.

இந்நிலையில், நடிகர் கிங்காங் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து நேற்று முன் தினம் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்தார், தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால் தற்பொழுது வரை வாழ்த்து பெற முடியவில்லை என்ற வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

சமூக வலைதளத்தில் இந்தப் பதிவை பெருமளவில் ரஜினி ரசிகர்கள் பகிர்ந்தனர். சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கிங்காங் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு உங்களைச் சந்தித்திருப்பேன்; ஆனால் இந்தத் தகவல் எனக்கு சரியாக வந்து சேரவில்லை மன்னித்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.

நீங்கள் விருது பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள் எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த், நிச்சயமாக கொரோனா காலம் முடிந்த பிறகு ஒரு நாள் நாம் சந்திக்கலாம் விரைவில் உங்களை அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


1,368 thoughts on “நடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/